அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது இரு பிரிவினரிடையே மோதல்

0 2279
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது இரு பிரிவினரிடையே மோதல்

புதுச்சேரி ஏனாமில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஏனாமில் பாஜக ஆதரவு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அசோக்கின் ஆதரவாளர்களுக்கும், என்ஆர் காங்கிரசின் மல்லாடி கிருஷ்ணராவின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்கெனவே மோதல் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மாலை அணிவிக்க வந்தபோது இரு பிரிவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்கள், கம்பு ஆகியவற்றால் தாக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தலையிட்டு இரு பிரிவினரையும் கலைந்துபோகச் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments