கள்ளழகர் எழுந்தருளி திரும்புகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் பலி.. ரூ.5 லட்சம் முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

0 2896
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளழகரான சுந்தரராஜ பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தி மதுரை வைகையாற்றில் இன்று காலை எழுந்தருளினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டனர்.

அப்போது கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி திரும்புகையில், புனித நீர் பீய்ச்சி அடித்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அதில் சிக்கி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 50 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments