பஞ்சாபில் ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவிப்பு

0 2967
பஞ்சாபில் ஜூலை 1ஆம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மன் அறிவித்துள்ளார்.

பஞ்சாபில் ஜூலை 1ஆம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மன் அறிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின்போது, இலவச மின்சார அறிவிப்பானது, ஆம் ஆத்மி கட்சியின் மிக முக்கியமான வாக்குறுதியாக இருந்தது. தற்போது, ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைவதையொட்டி, 300 யூனிட் இலவச மின்சார அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம், 10 ஆயிரம் போலீஸ் பணி இடங்கள் உட்பட 25 ஆயிரம் அரசு பணி இடங்களை நிரப்புதல் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய நிலையில், தற்போது இலவச மின்சார வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments