மதுரை வைகையாற்றில் கூட்டநெரிசலில் சிக்கி 2 பேர் பலி.. உதவி எண் அறிவிப்பு

0 3195
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி, 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி, 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளழகரான சுந்தரராஜ பெருமாள் பச்சைப்பட்டு உடுத்தி மதுரை வைகையாற்றில் இன்று காலை எழுந்தருளினார். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டனர்.

அப்போது கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி திரும்புகையில், புனித நீர் பீய்ச்சி அடித்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அதில் சிக்கி 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 50 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விவரம் அறிய தொடர்பு கொள்ள உதவி எண் 9498042434 அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments