குட்கா வியாபாரி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.6.31 கோடி பணம்..

0 2942
உத்தரபிரதேசத்தில் குட்கா வியாபாரி வீட்டில் சோதனையில் ஈடுபட்ட ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகாரிகள் படுக்கை உள்ளிட்ட வீட்டின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத 6 கோடி 31 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

உத்தரபிரதேசத்தில் குட்கா வியாபாரி வீட்டில் சோதனையில் ஈடுபட்ட ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகாரிகள் படுக்கை உள்ளிட்ட வீட்டின் பல்வேறு இடங்களில் கணக்கில் வராத 6 கோடி 31 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

வரிஏய்ப்பு விவகாரத்தில் ஹமிர்புர் பகுதியை சேர்ந்த குட்கா வியாபாரி ஜகத் குப்தா என்பவரின் வீட்டில் ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

படுக்கை, உள்ளிட்ட வீடுகளின் பல்வேறு பகுதிகளில் குவியல் குவியலாக கிடைத்த 6 கோடியே 31 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஜகத் குப்தாவின் தொழில் பங்குதாரர், உறவினர், அலுவலக காவலர் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் வீட்டிற்குள்ளேயே பான் மசாலா ஆலையை ஜக்த் குப்தா நடத்தி வந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments