பாலக்காட்டில் வளைவில் அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவி.!
கேரள மாநிலம் பாலக்காட்டில் வளைவில் அதிவேகமாக சென்ற பேருந்தில் இருந்து பள்ளி மாணவி தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது.
மண்ணார்காடு பகுதியில் தனியர் பேருந்து வளைவில் அதிவேகமாக சென்றது. பேருந்தின் வேகத்தில் படியருகே நின்ற பத்தாம் வகுப்பு மாணவி வெளியே தூக்கி வீசப்பட்டாள். சம்பவத்தில் சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாள்.
சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரின் உரிமத்தை முடக்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments