கர்நாடக அமைச்சர் ஈசுவரப்பா ராஜினாமா..!

0 1975

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட கர்நாடக ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜகவைச் சேர்ந்த அமைச்சரான ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், தனது உயிரிழப்பிற்கு ஈஸ்வரப்பா தான் காரணம் என தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டதால், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த ஈஸ்வரப்பா பெங்களூருவில் உள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வீட்டிற்கு சென்று ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments