அலையன்ஸ் ஏர் தனி நிறுவனமானது.. மத்திய அரசு அறிவிப்பு
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமாக இருந்த அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், மத்திய அரசின் கீழ் தனி விமான நிறுவனமாக செயல்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தி, 3 மாதங்களுக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இனி அலையன்ஸ் ஏர் என்ற பெயரிலேயே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனத்தின் சிஇஒ வினீத் சூட் தெரிவித்துள்ளார்.
தங்களது நிறுவன இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனமும், இனி அலையன்ஸ் ஏர் தங்களது துணை நிறுவனம் அல்ல என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அலையன்ஸ் ஏர் விமான டிக்கெட் முன்பதிவை இனி ஏர் இந்தியா மேற்கொள்ளாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
Comments