மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல்.. ஓட்டுநர் உயிரிழப்பு

0 2293
மது குடித்ததை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநரின் தலையில், பீர் பாட்டிலால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

மது குடித்ததை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநரின் தலையில், பீர் பாட்டிலால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

சென்னை ரெட்டேரி பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில், கொளத்தூரை சேர்ந்த குழந்தைவேலு, ஸ்டீபன் இருவரும் மது அருந்தியதை மதனகோபால் என்ற ஆட்டோ ஓட்டுநர் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து புறப்பட்ட மதனகோபாலை மற்றொரு ஆட்டோவில் குழந்தைவேலுவும் ஸ்டீபனும் பின் தொடர்ந்து சென்று, தலையில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.

இருவர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட மதனகோபால், தற்போது உயிரிழந்ததால், கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments