சும்மா போன யானைகளை சுரண்டிய சுற்றுலா பயணிகளை தலை தெறிக்க ஓட வைத்த யானையார்..

0 2424
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பயணிகளை காட்டு யானை ஒன்று திடீரென துரத்தி சென்ற காணொளி வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பயணிகளை காட்டு யானை ஒன்று திடீரென துரத்தி சென்ற காணொளி வெளியாகி உள்ளது.

வனப்பகுதியில் வசித்த காட்டுயானைகள் கடந்த 3 வாரங்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளிப் பகுதிகளில் உலாவி வருகின்றன.

காட்டேரி பூங்கா அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுருந்த யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

யானைகளை பார்க்க திரண்ட சுற்றுலா பயணிகள் வனத்துறையினர் எச்சரிக்கையை மீறி அவற்றை புகைப்படம் எடுத்து வந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த காட்டுயானை ஒன்று திடீரென அவர்களை துரத்த தொடங்கியதால் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments