வீட்டுக்கு முன் நின்றிருந்த பா.ஜ.க. பிரமுகரின் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. தீ வைத்துச் சென்ற மர்ம நபருக்கும், இளம்பெண்ணுக்கும் வலைவீச்சு

0 2028
வீட்டுக்கு முன் நின்றிருந்த பா.ஜ.க. பிரமுகரின் காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. தீ வைத்துச் சென்ற மர்ம நபருக்கும், இளம்பெண்ணுக்கும் வலைவீச்சு

சென்னை அடுத்த மதுரவாயலில் வீட்டுக்கு முன் நின்றிருந்த பா.ஜ.க. பிரமுகரின் காருக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரவாயலில் வசித்து வரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளராக இருக்கும் சதீஷ்குமார், வழக்கம்போல் தனது வீட்டுக்கு முன் காரை நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்றிரவு அங்கு வந்த மர்ம நபரும், ஒரு இளம்பெண்ணும் வெகு நேரமாக நோட்டமிட்டதோடு, கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை கார் முழுவதும் தெளித்தனர்.

பின்னர், சிறுவர்கள் சிலர் சைக்கிளில் வந்ததை பார்த்து ஓடி ஒளிந்து கொண்ட இருவரும் அவர்கள் சென்ற பிறகு காருக்கு தீவைத்து விட்டு தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

கோயம்பேட்டில் நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பா.ஜ.க. - விசிக இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், சதீஷ்குமாரும் இருந்த நிலையில், அவரது காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments