டாட்டா ஹைட்ரஜன் பேருந்தை சாலையில் இயக்கி சோதிக்க மத்திய அரசு ஒப்புதல்

0 2483
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பேருந்தைச் சாலையில் இயக்கிச் சோதிக்க மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹைட்ரஜன் பேருந்தைச் சாலையில் இயக்கிச் சோதிக்க மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 15 ஹைட்ரஜன் பேருந்துகளைத் தயாரித்து வழங்கும் டெண்டரை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது. முதலில் இரண்டு பேருந்துகளைச் செயல் விளக்கத்துக்காக வாங்கவும் இரு நிறுவனங்களிடையே புரிந்துணர்வு உடன்பாடு கையொப்பமாகியுள்ளது.

இந்நிலையில் முதலில் தயாரித்துள்ள இரண்டு பேருந்துகளையும் சாலையில் இயக்கி வெள்ளோட்டம் பார்க்க மத்தியச் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் சோதனை தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments