காலை 11.30 மணி வரை உணவு தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

0 5762
காலை 11.30 மணி வரை உணவு தராததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதியவர் ஒருவர், 11.30 மணி வரை காலை உணவை தராததால், மருமகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவரான காசிநாத் பாண்டுரங் பட்டீலுக்கு, காலையில் தேநீர் வழங்கியபோது, காலை சிற்றுண்டியை அவரது மருமகள் கொடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த காசிநாத், தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் மருமகளின் வயிற்று பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, காசிநாத்தின் மற்றொரு மருமகள் அளித்த புகாரில், அவர் மீது கொலை முயற்சி, ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments