சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஒரே கட்டமாக தேர்வுகள்

0 2014
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஒரே கட்டமாக தேர்வுகள்

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல், ஒரே கட்டமாக தேர்வு நடைபெறுகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதனால், இந்த கல்வி ஆண்டில் இரண்டு கட்டங்களாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, கடந்த நவம்பர், டிசம்பரில் முதல்கட்ட தேர்வுகள் முடிந்தன.

இரண்டாம் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி துவங்குகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து, அனைத்து பள்ளிகளும் முழுமையாக இயங்கி வருவதால், வரும் கல்வி ஆண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய முறைப்படி ஒரே கட்டமாக தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments