திருமண நிகழ்வுக்காக காரில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி

0 2372

திருவண்ணாமலையில் திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது ஈச்சர் லாரி மோதிய கோர விபத்தில் பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிங்காரப்பேட்டைக்கு திருமணத்திற்கு செல்வதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் என 7 பேர்  டாடா காரில் சென்று கொண்டிருந்தனர். கார் கிரிவலப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, செங்கம் சாலை பிரியும் இடத்தில் எதிரே வந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.

இதில், கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்த பெண்ணும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருவண்ணாமலை கிராமிய போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments