ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1க்கு விற்பனை - 500 பேருக்கு சிறப்புச் சலுகை.!

0 3255

மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூரில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அலைகடல் என திரண்ட வாகன ஓட்டிகளால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சோலாப்பூரில் உள்ளூர் இளைஞர் அமைப்பு அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு முதலில் வரும் 500 பேருக்கு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தது.

கவர்ச்சிகர அறிவிப்பை கேட்டு அலைகடல் என வாகன ஓட்டிகள் திரண்டனர். பெட்ரோல் பங்கில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டியடித்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments