பிலிப்பைன்சில் மழை-வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு

0 2069

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மெகி புயலை தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

லெய்டே உள்ளிட்ட மாகாணங்களில் வீசிய புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சுற்றுவட்டார பகுதிகள் நீரில் மூழ்கின. கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறின.

கன மழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மண்சரிவுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments