கள்ளக்குறிச்சியில் வீட்டிலேயே ஒருவர் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்.!

0 3758

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் கிராமத்தில், ஒரு நபர் வீட்டில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், 8 மதுபாட்டில்கள் வாங்கினால் ஒரு பாட்டில் இலவசம் என ஆஃபர் கொடுத்து வீட்டிலேயே மதுவிற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் மது வாங்கச் சென்ற நபர் ஒருவர், இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதே போல தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments