ஒட்டகங்களை பலியிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

0 3075

ஒட்டகங்களை சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து பலியிட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு பலியிடப்படுவதை தடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கொண்டு வரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒட்டகங்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு, பலியிடும் நிகழ்வுகள் நடைபெறவில்லை எனவும் தமிழக அரசுத்தரப்பில், தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்று, நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments