ஆந்திராவில் வேதியியல் தொழிற்சாலையில் உலை வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி.!

0 2304

ஆந்திராவில் வேதியியல் தொழிற்சாலையில் உலை வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஏலூரு மாவட்டத்தில் அமைந்துள்ள வேதிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த போது, நான்காவது யூனிட்டில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டு உலை வெடித்து தீப்பற்றியது.

இதில், அந்த யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், அங்கு சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் 6 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments