சென்னையில் தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் தாக்கிவிட்டு 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது.!

0 3135

சென்னை அம்பத்தூர் அருகே தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் தாக்கிவிட்டு 82 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 72 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

வானகரத்திலுள்ள அந்த நிறுவனத்தின் மேலாளரான விஜயகுமார் என்பவர் கடந்த 10ஆம் தேதி 82 லட்ச ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, 3 பேர் வழிமறித்து அவரை கத்தியால் தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றனர்.

ஏற்கனவே ஒருமுறை விஜயகுமாரிடம் இருந்து 5 லட்ச ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்த, நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் என்பவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

சிறையில் இருக்கும்போது பழக்கமான ஸ்ரீகாந்த் என்பவனிடம் இந்த 82 லட்ச ரூபாய் கொள்ளைக்கான திட்டம் தீட்டிக் கொடுத்தது அவன் தான் என்பது தெரியவந்தது.

ஆனால் கொள்ளையடித்த பணத்துடன் ஸ்ரீகாந்த் கும்பல் தலைமறைவாகிவிட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments