திருநெல்வேலியில் நகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 17 வயது மாணவன் உட்பட 6 பேர் கைது.!

0 3939

திருநெல்வேலியில் நகைக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 17 வயது மாணவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வீரவநல்லூர் மெயின் பஜாரில் கடந்த 11-ம் தேதி வழக்கம் போல இரவில் கடையை பூட்டிவிட்டு, நகைகள் வைக்கப்பட்டு இருந்த பையுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த மைதீன்பிச்சை என்பவரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு 5 கிலோ நகையை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய மைதீன்பிச்சையை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அப்பகுதில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், பாறையடி காலனியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவனை கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேர் சிக்கினர். நிகழ்ச்சிகளில் பேண்ட் வாசிக்கும் தொழிலை செய்து வரும் இவர்கள் கொள்ளையடித்த நகைகளை பேண்ட் வாத்தியங்களுக்குள் மறைத்து வைத்ததும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments