காஞ்சிபுரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து.!

0 2402

காஞ்சிபுரத்தில் தனியார் தொழிற்சாலை பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களை அழைத்துச் செல்லும் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாலையோரம் நின்ற அந்த பேருந்தில் திடீரென தீப்பிடிக்க தொடங்கி, பேருந்து முழுவதும் பரவியது.

இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீயை முழுவதுமாக அனைத்தனர். ஆனாலும், பேருந்து முழுவதும் எரிந்த நாசமானது. கோடை வெயில் காரணமாக, இருக்கையில் தீப்பிடித்து பேருந்தில் பரவியதா அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments