தென்னாப்பிரிக்காவில் கொட்டித் தீர்த்த கனமழை.. பலி எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு

0 2492
தென்னாப்பிரிக்காவில் கொட்டித் தீர்த்த கனமழை.. பலி எண்ணிக்கை 259 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு கடலோர பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அந்நாட்டு அதிபர் Cyril Ramaphosa, பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments