மதுரையில் விளைநிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற உதவி மின் பொறியாளர் கைது.!

0 3919

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, விளைநிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

பொட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் உறவினர் பெயரிலுள்ள விளைநிலத்திற்கு இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து, கொட்டம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளராக பணியாற்றும் தங்கம் முனியாண்டி என்பவர், நிலத்தை கள ஆய்வு செய்ய சென்ற போது கோபாலகிருஷ்ணனிடம் 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments