சமையல் எரிவாயு சிலிண்டரில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்த நபர் கைது

0 3639

பீகாரில் சமையல் எரிவாயு சிலிண்டரில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பிர்பகார் பகுதியை சேர்ந்த ஒருவர், சமையல் எரிவாயு சிலிண்டரின் அடிப் பகுதியை வெட்டி எடுத்து விட்டு, அதற்குள் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து வந்துள்ளார். போலீசார் நடத்திய சோதனையில், சிலிண்டருக்குள் வைத்திருந்த 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக, பிர்பகார் அருகே உள்ள கதம்கட்டைச் சேர்ந்த பூஷண் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக பீகார் அரசு சமீபத்தில் குறைத்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments