ரோப் கார் விபத்துகளைத் தவிர்க்க அனைத்து குன்றுகளிலும் உள்ள ரோப் கார் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்

0 2661
ரோப் கார் விபத்துகளைத் தவிர்க்க அனைத்து குன்றுகளிலும் உள்ள ரோப் கார் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு வலியுறுத்தல்

ஜார்க்கண்ட்டில் உள்ள டியோகர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரோப் கார் விபத்தையடுத்து அனைத்து குன்றுகளிலும் உள்ள ரோப் கார் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட்டில் நிகழ்ந்த ரோப் கார் விபத்தில் மீட்பு பணியின் போது ஒரு பெண் தவறி விழுந்து பலியானார். 3 உயிர்களை பறிகொடுத்து இதர 60 சுற்றுலாப் பயணிகளையும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக பத்திரமாக மீட்டு வந்தனர்.குழந்தை ஒன்றை தீயணைப்பு வீரர் சாகசமாக மீட்ட காட்சி பரவலானது.

இச்சம்பவத்தை அடுத்து ரோப் கார் இணைப்பு பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஆபத்தான தருணங்களில் மீட்புப் பணிக்கான ஒத்திகைகள் மேற்கொள்ளுமாறும் மத்திய அரசு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments