அயோத்யா மண்டபத்தை அறநிலைய துறை கையகப்படுத்த அனுமதித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

0 2231
தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலைய துறை கையகப்படுத்த அனுமதித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்யா மண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டதை தனி நீதிபதி வி.எம். வேலுமணி கடந்த மாதம் உறுதி செய்திருந்தார்.

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அப்போது அயோத்தியா மண்டபம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் கீழ் செயல்படும் பள்ளி தொடர்ந்து செயல்படலாம் என்றும், கல்யாண மண்டபத்தை பயன்படுத்தலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments