கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

0 2061
கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக மாறியது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால், கொரோனா நோயாளிகள் இல்லாத மருத்துவமனையாக அது மாறி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அதிக படுக்கை வசதி கொண்ட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 65,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், முதல் முறையாக கொரோனா நோயாளிகள் யாரும் அங்கு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்களிடையே இது மகிழ்சியை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments