இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஹெலினா.. ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

0 2141
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஹெலினா.. ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஹெலினா‘ என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்தபடி பீரங்கிகளை குறி பார்த்து அழிக்கும் இந்த ஏவுகணையானது, லடாக் பகுதியில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் டி.ஆர்.டி.ஓ.விஞ்ஞானிகள் ஆகியோரை கொண்ட குழுவினர் ‘ஹெலினா‘ ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments