பாஜக எம்.பி.யின் வீட்டு முன் நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் போராட்டம்

0 2583
பாஜக எம்.பி.யின் வீட்டு முன் நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் போராட்டம்

தெலங்கானாவில் பாஜக எம்பி.யின் வீட்டு முன்பு நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தெலங்கானாவில் போராட்டம் நீடித்து வரும் நிலையில், நிஜாமாபாத்தில் உள்ள பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரியின் வீட்டு முன்பு நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி, போராட்டம் நடத்தியவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல எனவும் தினக்கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்து தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியினர் போராட்டம் நடத்துவதாகவும் விமர்சித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments