சென்னையில் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்த கும்பல் கைது.!

0 2403

சென்னை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டு தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மணலிபுதுநகர், ஆஞ்சேயர் கோவில் பின்புறம் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சோதனை நடத்தியதில் கலர் பிரிண்டர் எந்திரங்கள் மூலம் 200 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டுகள் தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 6 பேரை கைது செய்த போலீசார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளையும், கலர் பிரிண்டர் எந்திரங்கள் மற்றும் கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments