சென்னை ராயபுரத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

0 1700

நகரங்களில் இனிக் கட்டப்படும் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் இரும்புத் தூண், உத்தரங்கள் கொண்டு குறைந்த செலவில் கட்டப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மூர்த்தி, எழிலரசன், பிச்சாண்டி ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்கா அருகே பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகப் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும், காஞ்சிபுரத்திலும் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments