திம்பம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்தை அனுமதிக்க கோரி கடையடைப்பு போராட்டம்

0 1457
திம்பம் மலைப்பாதையில் கனரக வாகன போக்குவரத்தை அனுமதிக்க கோரி கடையடைப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர கனரக வாகன போக்குவரத்திற்கு அனுமதிக்கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

திம்பம் வன சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டதோடு, 16.2 டன் எடை அளவுள்ள 6 மற்றும் 10 சக்கர லாரிகள் மட்டுமே காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளை பயன்படுத்தும் கனரக லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் காரணமாக கனரக வாகனங்களுக்கு அனுமதி கோரி சத்தியமங்கலம், தாளவாடி மைசூர் டிரங்க் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments