கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்த கார் - ஒருவர் பலி.. விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 2001
https://www.youtube.com/watch?v=fCG-mY7wOu8

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நெடுங்சாலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி சாலை நடுவே இருந்த கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த மூவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல மதுரையைச் சேர்ந்த பாலமுருகன், அருண்குமார், ஜெயக்குமார் ஆகிய மூவர் சிவப்பு நிற டவேரா காரில் சென்றுக்கொண்டிருந்தனர்.

பரமக்குடி வேந்தோணி ஜங்ஷன் அருகே வந்த போது சாலையின் நடுவில் அதி வேகத்தை கட்டுப்படுத்த வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை வேகம் குறையாமல் கடக்க முயன்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

அந்த பகுதியில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் இந்த விபத்தின் காட்சி பதிவாகியுள்ளது. இந்த கோர விபத்தில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments