மாநில உரிமை, மொழி உரிமை காக்கத் தொடர்ந்து பாடுபடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1613
மாநில உரிமை, மொழி உரிமை காக்கத் தொடர்ந்து பாடுபடுவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில உரிமை, மொழி உரிமை காத்திடக் கண்ணும் கருத்துமாகத் தொடர்ந்து பாடுபடப் போவதாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் கேரளத்தின் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் மலையாளத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் முழங்கி மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 

தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகச் செய்கின்ற பணி தொடர்ந்து சீராக நடைபெறும் என கூறியுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டை வளர்த்தெடுத்து அதன் தாக்கத்தைப் பிற மாநிலங்களிலும் ஏற்படுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments