ராமநவமி கொண்டாட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.. மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் எஸ்.பி., போலீசார் காயம்

0 4407
ராமநவமி கொண்டாட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.. மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் எஸ்.பி., போலீசார் காயம்

மத்திய பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் எஸ்.பி. மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.

செந்தவா மற்றும் கார்கோனில் ராம் நவமி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் தங்களுக்குள் தாக்கிக் கொண்ட நிலையில் கலவரத்தை தடுக்க வந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 5 காவலர்கள் உள்பட பொதுமக்கள் காயம் அடைந்தனர். மேலும் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் எஸ். பி. படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments