உத்தரபிரதேசத்தில் சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

0 1069
உத்தரபிரதேசத்தில் சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் இரு சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்த விபத்தில், இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்து உருக்குலைந்தன.

ராம்பூர் பகுதியில் சென்ற இரு லாரிகளும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. விபத்தில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

வானுயர்ந்து தீ மற்றும் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments