பிரேக் பழுதானதால், சுற்றுலா வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து - 8 பேர் காயம்

0 3353

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சுற்றுலா வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சுமார் 80 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

திருச்சியை சேர்ந்த சுகுமாரன்,பரமேஸ்வரி தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தார் செவ்ரோலே டவேரா (Chevrolet Tavera) வாடகை வாகனம் மூலம் ஊட்டிக்கு வந்து சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, மேல்தட்டப்பள்ளம் பகுதி அருகே பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர தடுப்பை தாண்டி பள்ளத்தில் உருண்டு விழுந்தததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 பேரும் காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments