18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் இயக்கம் தொடக்கம்

0 2109

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் இயக்கம் இன்று நாடுமுழுவதும் தனியார் தடுப்பூசி மையங்களில் தொடங்கியுள்ளது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் ஆன, 18 வயதுக்கு மேற்பட்டோர் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய நலவாழ்வு அமைச்சகம் அறிவித்தது.

இதையடுத்து சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தடுப்பூசி விலையை 225 ரூபாயாகக் குறைப்பதாக அறிவித்துள்ளன. தடுப்பூசி விலையுடன் சேவைக்கட்டணமாக அதிகப்பட்சம் 150 ரூபாய் வரை பெறலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இயக்கம் தொடங்கியுள்ளது. டெல்லி, மும்பை, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments