இலங்கையை வாட்டி வதைக்கும் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி.. மேலும் 19 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை

0 1769
இலங்கையை வாட்டி வதைக்கும் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி.. மேலும் 19 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை

லங்கையில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், 2 கைக்குழந்தைகள் உட்பட மேலும் 19 இலங்கை தமிழர்கள் அதிகாலை படகு மூலம் தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஏற்கனவே தமிழகம் வந்த 20 இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை இலங்கையின் திரிகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து பைபர் படகுகளில் தனுஷ்கோடி வந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 அகதிகளை மண்டபம் அகதிகள் முகாமில் அதிகாரிகள் தங்க வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments