பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவது போல் வந்து செல்போன் திருடிச் சென்ற கும்பல்

0 1793
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவது போல் வந்து செல்போன் திருடிச் சென்ற கும்பல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போனைத் திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை பொன்னமராவதி அண்ணா சாலையில் உள்ள அந்த பல்பொருள் அங்காடிக்குள் பொருட்கள் வாங்குவது போல் சென்ற அந்த 3 பேர் கொண்ட கும்பலில் இரண்டு பேர் ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தனர்.

கடை ஊழியரின் பார்வையை மறைத்தவாறு நின்று பேசிக் கொண்டிருந்த அந்த இருவருக்கும் பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் அங்கிருந்த செல்போன் ஒன்றை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டான்.  பிறகு மூவரும் அங்கிருந்து அகன்றனர்.

இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த திருட்டுக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments