விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு.. உண்டியலில் ரூ.400 ரூபாய் மட்டுமே இருந்ததாக கூறிய கொள்ளையன்

0 1608
விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு.. உண்டியலில் ரூ.400 ரூபாய் மட்டுமே இருந்ததாக கூறிய கொள்ளையன்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உண்டியலை அப்படியே தூக்கிச்சென்று பணத்தை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

2 நாட்களுக்கு முன்பு, இரவில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஆரம்ப பஞ்சமுக விநாயகர் கோவிலின் பூட்டை, கைலி அணிந்திருந்த ஒருவன் கடப்பாரையால் தாக்கி உடைத்துவிட்டு உள்ளே புகுந்து உண்டியலை தூக்கிச்சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன.

அதனை அடிப்படையாக கொண்டு ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த கொள்ளையன் கம்மாபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து வயல்வெளியில் பதுங்கியிருந்த ரமேஷை பிடித்து விசாரித்த போது, உண்டியலில் 400 ரூபாய் மட்டுமே இருந்ததாக  கூறியுள்ளான். பின்னர் அவன் கைது செய்யப்பட்டு மாவட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments