தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை.. கோடை வெப்பத்தினிடையே பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

0 1698
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை.. கோடை வெப்பத்தினிடையே பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

மிழகத்தில் தேனி, தஞ்சாவூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. சேலத்தில் ஐந்து ரோடு, புதிய பேருந்து நிலையம் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் 1 மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், தேவகோட்டை நகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரங்களில் கனமழையும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழையும் பெய்தது.

கரூரில் ஆங்காங்கே விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில் பஞ்சமாதேவி பகுதியில் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments