இந்திய கடல் எல்லையில் நுழைந்த ஈரானிய சிறிய ரக கப்பல் சிறைபிடிப்பு.!

0 1450

இந்திய கடல் எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டு சிறிய ரக கப்பலை, 11 ஈரானியர்களோடு இந்திய கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர்.

அந்தமானை ஒட்டியுள்ள இந்திரா பாயிண்ட் கடற்பகுதியில் ஈரான் கப்பல் அத்துமீறி நுழைவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர் கப்பலை சுற்றி வளைத்து சிறைபிடித்து சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் மீனவர்களா அல்லது போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பல் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments