ஈரோட்டில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு - சாமர்த்தியமாக காப்பாற்றிய பயணி

0 13066

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே, அரசு பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், பயணி ஒருவர் பேருந்தை சாமர்த்தியமாக இயக்கி சென்டர் மீடியனில் மோதச் செய்து பயணிகளை காப்பாற்றினார்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து இந்த அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு, திருப்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. திண்டல் அருகே, ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு அவர் துடித்துக் கொண்டே இடதுபுறம் சாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்ட நிலையில், பயணி ஒருவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை இயக்கி சென்டர் மீடியனில் மோதச் செய்து பேருந்தை நிறுத்தியுள்ளார்.

அந்த பயணி சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வலிப்பு ஏற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments