சேலத்தில் வாரிசு அடிப்படையில் எனக்கூறி பலரை பணியில் சேர்த்து முறைகேடு செய்ததாக, மாநகராட்சி கணக்கு அலுவலர் சஸ்பெண்ட்.!

0 2536

சேலம் மாநகராட்சியில் வாரிசு அடிப்படையில் எனக்கூறி பலரை பணியில் சேர்த்து முறைகேடு செய்ததாக, மாநகராட்சி கணக்கு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கு அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடேசன் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன.

மாநகராட்சியில் வாரிசு அடிப்படையில் 200க்கும் மேற்பட்டோர் பணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவர் மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுகளாக இல்லாத சிலரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியில் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.

வருடாந்திர ஆய்வில் வெங்கடேசன் முறைகேடு செய்தது தெரிய வந்ததையடுத்து, அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments