ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மிசோரமில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு

0 2781

ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஹரியானா சுகாதாரத்துறை செயலருக்கு, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய அளவில் கொரோனா தொற்று கடந்த இரு மாதங்களாக குறைந்து வரும் நிலையில், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதால் சில மாநிலங்களில் பெருந்தொற்றின் பரவும் விகிதம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொற்று பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், சோதனை,  சிகிச்சை, தடுப்பூசி போன்ற நடைமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments