மின்சார ரயிலில் அடிபட்டு 3 இளைஞர்கள் உயிரிழந்த விவகாரம்.. "கஞ்சா" நண்பனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டி நள்ளிரவில் தாக்குதல்

0 2279
மின்சார ரயிலில் அடிபட்டு 3 இளைஞர்கள் உயிரிழந்த விவகாரம்.. "கஞ்சா" நண்பனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டி நள்ளிரவில் தாக்குதல்

செங்கல்பட்டு அருகே மின்சார ரயிலில் அடிபட்டு 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை இளைஞர்களின் உறவினர்கள் தாக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

சிங்கப்பெருமாள்கோவிலைச் சேர்ந்த மோகன், பிரகாஷ், அசோக் என்ற அந்த 3 இளைஞர்களும் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் வீடியோ பதிவு செய்யும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.

அவர்களின் நண்பனான லோகேஷ் என்பவன் தான் இந்த மூவருக்கும் கஞ்சா வாங்கிக் கொடுத்து அடிமையாக்கினான் என்பது உறவினர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இளைஞர்கள் இறந்தது முதல் லோகேஷ் தலைமறைவானதாகக் கூறப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறி, நள்ளிரவில் அவரது வீட்டை இளைஞர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

லோகேஷ் தன் வீட்டில் இல்லை என கிருஷ்ணமூர்த்தி கூறியதை அவர்கள் ஏற்காததால் இளைஞர்களின் உறவினர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments