பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு.. மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்

0 2082

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதற்காக நடிகர் எஸ்.வி சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.

வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இதன் விசாரணையின்போது, அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் பார்வேர்ட் செயதாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என்றும் கூறி, எஸ்.வி சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, மன்னிப்பு கோருவது குறித்த எஸ்.வி.சேகரின் நிலைப்பாட்டை, நான்கு புகார்கள் மீதான வழக்குகளில் தனித்தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments